பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்தித்து பேசவிருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை மாலை 4 மணிக்கு சந்திக்கிறார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்கவுள்ளார். 7 பேர் விடுதலை, நீட் உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் ஆளுநரின் சார்பாக பிரதமரிடம் எடுத்து வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்திருந்தார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F1874114199436492%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com