பதவி பிரமாணம் செய்து வைப்பதில் ஆந்திர ஆளுநர் சாதனை!

பதவி பிரமாணம் செய்து வைப்பதில் ஆந்திர ஆளுநர் சாதனை!
பதவி பிரமாணம் செய்து வைப்பதில் ஆந்திர ஆளுநர் சாதனை!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் நரசிம்மன், கடந்த 9 வருடங்களில் 5 முதலமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர் என்ற பெருமையை பெறுகிறார்.  

ஆந்திர மற்றும் தெலங்கானா ஆளுநராக இருப்பவர் நரசிம்மன். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், முதலில் சத்தீஷ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திராவுக்கு மாற்றப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி, ஆந்திர முதலமைச்ச ராக  பதவியேற்ற கிரண் குமார் ரெட்டிக்கு இவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பிறகு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்தது. இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இவரே நியமிக்கப்பட்டார். பின், தெலங்கானா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சந்திரசேகர ராவுக்கு 2014 ஆம் ஆண்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே வருடத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

கடந்தாண்டு நடந்த தெலங்கானா தேர்தலில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றது. இதையடுத்து சந்திரசேகர ராவுக்கு இரண்டாவது முறையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், நரசிம்மன். ஆந்திர மாநில முதலமைச்சராக, ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். ஆளுநர் நரசிம்மன் இன்று அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

இதையடுத்து 9 வருடத்துக்குள் 5 முதலமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சாதனை படைக்கிறார் ஆளுநர் நரசிம்மன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com