மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு 
Published on

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

கூட்டணி கட்சிகளான பாஜகவுக்கும் சிவசேனா கட்சிக்கும் இடையே முதலமைச்சர் பதவி பகிர்வில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்பதால், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். 

இதனால் இன்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். மேலும் சிவசேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ்-என்சிபியுடன் சிவசேனா ஆட்சியமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இரண்டாவது பெரும்பான்மையை பிடித்துள்ள சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சிமைக்க விருப்பத்தையும் பெரும்பான்மையையும் நிரூபிக்க வேண்டும் என சிவசேன கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பாஜகவுடனான கூட்டணி இல்லை என அறிவித்தால் சிவசேனா கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுப்போம் என தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com