’மட்பாண்ட தொழிலாளர்கள் களிமண் வாங்க அரசு மானியம்’ - ஆய்வுக்கு பின் ஆளுநர் தமிழிசை பேட்டி

’மட்பாண்ட தொழிலாளர்கள் களிமண் வாங்க அரசு மானியம்’ - ஆய்வுக்கு பின் ஆளுநர் தமிழிசை பேட்டி
’மட்பாண்ட தொழிலாளர்கள் களிமண் வாங்க அரசு மானியம்’ - ஆய்வுக்கு பின் ஆளுநர் தமிழிசை பேட்டி

புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் அழிவின் விளிம்பில் உள்ள மண்பாண்ட கலைஞர்களின் வீடுகளுக்கே சென்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆளுநர் சௌந்தரராஜன் ஆய்வு செய்தார்.

ஆதி மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் என்று சொல்லலாம். தமிழர்களின் பல ஆயிராம் ஆண்டு நாகரித்தை இன்றும் உறுதி செய்யபவை மண்பாண்டங்களே இதை பல இடங்களில் நிகழ்த்திய அகழ்வராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கால வெள்ளத்தில் மண்பாண்டங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் நிலை ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு இந்த தொழிலுக்கு உரிய ஆதரவு இல்லாததால் படிப்படியாக அழிவின் விழிம்பில் உள்ளதை காணமுடிகின்றது.

குறிப்பாக புதுச்சேரியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு களிமண் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதில்லை, மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாராத்திற்கு அரசின் எந்தவித உதவியும் கிடைப்பதில்லை என்று நேற்று புதியதலைமுறையில் செய்தி வெளியானது.

இதையறிந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருடன் உருவையாறு, பகுதியில் மட்பாண்டங்கள் தயாரிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்கள். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் மட்பாண்ட தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான களிமண் தாரளமாக கிடைப்பதற்கும், களிமண் வாங்க அரசின் மானிய உதவி வழங்கப்படும் என்றார். மேலும் இந்த பொங்கல் பண்டிகையின்போது மண்பானைகளில் பொதுமக்கள் பொங்கல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com