ஸ்ரீநகரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை

ஸ்ரீநகரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை

ஸ்ரீநகரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை
Published on

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகள் அவ்வவ்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்படும். சில நேரங்களில் மாநிலத்திற்குள்ளாகவே நுழைந்து திடீர் தாக்குதலை நடத்துவார்கள். சமீபத்தில் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், அவந்திபோரா விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com