மீராகுமாரை விட அதிக வாக்குகள் பெற்ற கோபாலகிருஷ்ண காந்தி

மீராகுமாரை விட அதிக வாக்குகள் பெற்ற கோபாலகிருஷ்ண காந்தி
மீராகுமாரை விட அதிக வாக்குகள் பெற்ற கோபாலகிருஷ்ண காந்தி

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, துணை ஜனாதிபதி தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி உள்ளது. இருந்த போதிலும் தங்களின் ஓட்டு எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், 

"ஜனாதிபதி தேர்தலில் மீராகுமார் பெற்ற ஓட்டுக்களை விட துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. மீரா குமாருக்கு 225 எம்.பி.க்கள் ஓட்டளித்திருந்தனர். ஆனால் கோபாலகிருஷ்ண காந்திக்கு 244 எம்.பி.க்கள் ஓட்டளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலை விட துணை ஜனாதிபதி தேர்தலில் 19 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றுள்ளோம். ஓட்டுக்கள் குறைவதற்கு பதிலாக, காங்கிரசுக்கு ஆதரவான ஓட்டுக்கள் பெருகி உள்ளது. இது நல்ல விஷயம். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜ.க. எத்தனையோ முயற்சிகள் செய்தும் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு கடந்த 20 நாட்களில் எங்களின் ஓட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் எங்களின் பலம் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com