பணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்

பணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்
பணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்

கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் டெல்லியில் காலமானார். 

பிரணாப் நந்தா, 1988-ஆம் ஆண்டு பிரிவு போலீஸ் அதிகாரி ஆவார். அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் கோவா காவல் கண்காணிப்பாளாராக பொறுப்பேற்றார். பணி நிமித்தமாக டெல்லி சென்ற டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் இன்று காலை காலமானார். 

பிரணாப் நந்தாவின் மனைவி சுந்தரி நந்தா புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபியாக 2018-ல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com