ஒருவரை காப்பாற்ற நினைத்து ஆற்றில் விழுந்த 50 பேர்: கோவாவில் சோகம்

ஒருவரை காப்பாற்ற நினைத்து ஆற்றில் விழுந்த 50 பேர்: கோவாவில் சோகம்

ஒருவரை காப்பாற்ற நினைத்து ஆற்றில் விழுந்த 50 பேர்: கோவாவில் சோகம்
Published on

கோவாவின் சர்சோரெம் பகுதியில் இன்று மாலை நடைபாதை ஆற்றுப் பாலம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் இருந்த 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்தனர்.

விபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர். இந்த மீட்பு நடவடிக்கையை காண பல்வேறு மக்கள் அங்கு கூடினார். இதனால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது” என்றார்.

ஆற்றில் குதித்ததில் சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து தங்களது உயிரினை காப்பாற்றிக் கொண்டனர். மேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com