பாதுகாப்பான நாட்டுக்கு செல்லுங்கள்: ஹமீத் அன்சாரியை சாடும் ஆர்.எஸ்.எஸ்

பாதுகாப்பான நாட்டுக்கு செல்லுங்கள்: ஹமீத் அன்சாரியை சாடும் ஆர்.எஸ்.எஸ்

பாதுகாப்பான நாட்டுக்கு செல்லுங்கள்: ஹமீத் அன்சாரியை சாடும் ஆர்.எஸ்.எஸ்
Published on

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் துணைக் குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஹமீத் அன்சாரியை, இந்தியாவிலிருந்து வெளியேறி, பாதுகாப்பாகக் கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

முன்னதாக, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள், மாட்டிறைச்சி தடை, தாய் மதம் திரும்புவதற்கான பிரச்சாரங்கள் ஆகியவை முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றும் இதனால் அவர்கள் அச்சத்தோடு வாழ்கின்றனர் என்றும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com