10 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு வலைவீச்சு

10 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு வலைவீச்சு

10 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு வலைவீச்சு
Published on

அறைக்குள் அடைத்து வைத்து 10 நாட்களாக தனது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தன்னை உடல் அளவில் தாக்கியதாகவும் தப்பித்து வந்த இளம்பெண் புகார் கூறியுள்ளார்.

டெல்லி சுல்தான்புரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இவர்கள் இருவரும் உள்ளூர் பகுதியின் ஒருசில இடங்களை கண்டுகளித்தனர்.

பின்னர் அன்றைய தினம் இரவே சுதாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார் குமார். சுதாவும் நண்பர்தானே என நம்பி சென்றார். ஆனால் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்து பல நாட்களாக குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதுமட்டுமில்லாமல் உடல் அளவில் தாக்கியதாகவும் அங்கிருந்த தப்பி வந்த சுதா தனது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். மார்ச் 30ம் தேதி சுதா வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி தான் சுதா வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையத்து குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com