கவுரி லங்கேஷ் படுகொலை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்: சித்தராமய்யா குற்றச்சாட்டு

கவுரி லங்கேஷ் படுகொலை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்: சித்தராமய்யா குற்றச்சாட்டு
கவுரி லங்கேஷ் படுகொலை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்: சித்தராமய்யா குற்றச்சாட்டு

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை திட்டமிடப்பட்ட குற்றச்செயல் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் பேட்டியளித்த அவர், கவுரி படுகொலையை சிறப்புப் புலனாய்வுப் படை விசாரிக்கும் என்று தெரிவித்தார். விசாரணையின் முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று அவர் கூறினார்.

இதனிடையே கவுரி லங்கேஷ் படுகொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதிச் செயல் இருப்பதாக கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவும் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பேட்டியளித்த அவர், கல்புர்கி கொலையைப் போன்றதுதான் இதுவும் எனக் கூறப்படுவதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார். கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார். கவுரி கொலை குறித்து விளக்கமளிக்குமாறு கர்நாடக அரசை மத்திய உள்துறை அமைச்சகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை, நேற்று மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com