புதுச்சேரி: சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு!

புதுச்சேரி: சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு!

புதுச்சேரி: சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு - தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு!
Published on

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக புதுச்சேரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை காலைவரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் புதுச்சேரியில் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் முகக்கவசம், கிருமி நாசினி நாளை முதல் வழங்கப்படும்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com