வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பொருளாதாரக் குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு

பொருளாதாரக் குற்றங்கள் புரிந்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 28 பேர் கொண்ட பட்டியலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட தொழிலதிபர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 23 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், 13 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, நிதின் ஜெயந்திலால் சண்டேசரா உள்ளிட்ட 8 பேர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய இரண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளன. கடந்த மார்ச் மாதம் இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில், 23 பேர் இடம்பெற்றிருந்தனர். பொருளாதார குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களை விசாரணைக்காக இந்தியா அழைத்து வர பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 48 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com