\
#TopNews முதலமைச்சரின் எச்சரிக்கை முதல் கொரோனாவால் குவியும் சடலங்கள் வரை..!

#TopNews முதலமைச்சரின் எச்சரிக்கை முதல் கொரோனாவால் குவியும் சடலங்கள் வரை..!

#TopNews முதலமைச்சரின் எச்சரிக்கை முதல் கொரோனாவால் குவியும் சடலங்கள் வரை..!
Published on

தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு.

கொரோனா தொற்று உறுதியான 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள். தமிழகத்தில் இன்னும் சமூகத் தொற்று ஏற்படவில்லை என
சுகாதாரத்துறை விளக்கம்.

தொடர்ந்து தேவையின்றி வெளியே வருபவர்களைத் தடுக்க 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் வீட்டின் மின் விளக்குகளை அணைக்க வேண்டும். வீடுகளில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.

உலகெங்கும் கொரோனா பறித்த உயிர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. நியூயார்க் நகர மயானங்களில் குவியும் சடலங்கள். 

உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடங்கியுள்ளதாக சர்வதேச நிதியம் கவலை. 90 நாடுகள் அவசர நிதியுதவி கேட்டுள்ளதாகவும் தகவல்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com