மகாராஷ்டிர மாநிலத்தில் சீக்கிய இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு காவலர்கள் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் எனும் பகுதியில் உள்ள குருத்வாரா சார்பில் ஊர்வலம் ஒன்றிற்கு அனுமதி கேட்கப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநிலம் முழுவதும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். குருத்வாரா முன்பு தடுப்புகளையும் அமைத்துள்ளனர்.
ஊர்வலத்திற்கு அனுமதி கிடைக்காததால் ஆத்திரமடைந்த சீக்கிய இளைஞர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்து காவல்துறையினரை தாக்கியுள்ளனர். இதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.