இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, ஒரு உழியர் கூட அவர்களை சந்திக்க வரவில்லை என்பதைக் காண முடிந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் டாக்டர் அஜய் சந்தன்வாலே தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விசாரணை நடத்தியது. இந்நிலையில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக ஒரு மருத்துவர், ஒரு எம்.பி.பி.எஸ். மாணவர் மற்றும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 3 பேரை பெருநகர மும்பை மாநகராட்சி பணியிடை நீக்கம் செய்துள்ளது.