சத்தீஸ்கர்: சிஆர்பிஎஃப் வீரர் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலி

சத்தீஸ்கர்: சிஆர்பிஎஃப் வீரர் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலி

சத்தீஸ்கர்: சிஆர்பிஎஃப் வீரர் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலி

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், மத்திய துணை ராணுவப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

தனது சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் ரீதேஷ் ரஞ்சன் என்ற வீரர், லிங்காளப்பள்ளி என்ற இடத்தில் உள்ள முகாமில் திடீரென சக வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டுபாய்ந்த 7 பேர் உடனடியாக பத்ராசலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 வீரர்கள் சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரீதேஷ் ரஞ்சன், எதற்காக சக வீரர்களை சுட்டுக்கொன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com