மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்தது. அதன் தலைமை அதிகாரியாக இருந்த வினோத் ராய் கடந்த 2014 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, ஊழல் தொடர்பான விசாரணையில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை சேர்க்கக் கூடாதென, அப்போதைய காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபம் தன்னை நிர்பந்தித்ததாக கூறியிருந்தார்.