ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு
ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு

ஆந்திரம் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மானிக்யாலா ராவ் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அந்திராவில் இப்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விஜயவாடாவில் முன்னாள் அறநிலைத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மானிக்யாலா ராவ் கொரோனால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com