பாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது

பாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது
பாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது

நாட்டுபுறப் பாடகி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). இவர் கடந்த 1ஆம் தேதி இரவு 8 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சுஷ்மாவின் காதலர் கஜேந்திர பாட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை ஆய்வாளர் சுஜித் உபாத்யாயா, “சுஷ்மா தனது தாய், சகோதரி மற்றும் அவரது காதலன் கஜேந்திர பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் அவரது காதலன் கஜேந்திர பாட்டியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சுஷ்மாவிற்கும் கஜேந்திர பாட்டிக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் சுஷ்மா நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாட்டுபுறப் பாடல்கள் பாடுவதற்கு அவரது காதலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை சுஷ்மா ஏற்க மறுக்கவே அவர்களிடையே பிரச்னை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் கஜேந்திர பாட்டி சுஷ்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நாங்கள் நடத்திய விசாரணையில் கஜேந்திரா பாட்டி, சுஷ்மாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டார். அதாவது ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் சுஷ்மாவை இவர் கொலை செய்ய திட்டம் இட்டுள்ளார். அப்போது சுஷ்மா சென்றை காரை விபத்துக்குள்ளாக திட்டம் தீட்டியுள்ளார். எனினும் அதில் சுஷ்மா அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொலை செய்ய பிரமோத்,அஜப் சிங் மற்றும் டிரைவர் அமித் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். இதன்படி கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொலை செய்ய இருவருக்கும் 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டபடி 1ஆம் தேதி இரவு சுஷ்மா தனது வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கிய உடனே அவரை இந்த நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com