மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன் 

மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன் 

மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன் 
Published on

நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருகிறது. இது தொடர்பாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஷமிகா ரவி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இந்தியாவின் பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர். இதனைப் போக்க அரசு சீர்த் திருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பில் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் இது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com