“வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தார்” - பிளிப்கார்ட் நிறுவனர் மீது மனைவி புகார்

“வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தார்” - பிளிப்கார்ட் நிறுவனர் மீது மனைவி புகார்
“வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தார்” - பிளிப்கார்ட் நிறுவனர் மீது மனைவி புகார்

பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சலின் மீது அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால். இவரது மனைவி பிரியா. இவர் அவரது கணவர் சச்சின் மீது பெங்களூருவில் உள்ள கோரமங்களா காவல்நிலையத்தில் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மடிவாலா காவல்துறை உதவி கமிஷனர் காரி பசவனகவுடா, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் “சச்சின் பன்சாலின் மனைவி அவரது கணவர் மீது வரதட்சணை துன்புறுத்தியதாக ஒரு புகாரைத் தாக்கல் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

“திருமணத்திற்குப் பிறகு நான் என் கணவருடன் தங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பு, எனது மாமியார் என் வீட்டிற்குச் சென்று மேலும் வரதட்சணை கேட்டார். என் கணவரும் மாமியாரும் வரதட்சணைக்காக திருமணத்திலிருந்தே எனக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ந்து சித்திரவதைகளை அளித்து வருகின்றனர்.

எனது சகோதரி ராதிகா கோயல் டெல்லியில் இருந்தபோது, சச்சின் அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருந்தார். சச்சின் எனது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் அவரது பெயருக்கு மாற்ற முயற்சி செய்தார். நான் மறுத்தபோது, 20 அக்டோபர் 2019 அன்று சச்சின் என்னைப் போட்டு அடித்தார். மேலும் வரதட்சணைக் கேட்டு என் மாமியார் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்தார்”என்று பிரியா பன்சால் காவல்துறையிடம் வழங்கியுள்ள புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் தனது திருமணத்திற்கு அவரது தந்தையிடம் ரூ. 50 லட்சம் வசூலித்ததாகவும் மேலும் கூடுதலாக பன்சாலுக்கு ரூ .11 லட்சம் கொடுத்ததாகவும் பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com