விரைவில் தொடங்கும் விமான சேவை.. இன்று காலை முதல் முன்பதிவு

விரைவில் தொடங்கும் விமான சேவை.. இன்று காலை முதல் முன்பதிவு
விரைவில் தொடங்கும் விமான சேவை.. இன்று காலை முதல் முன்பதிவு

உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்காக முன் பதிவு செய்வோர் இன்று காலை பதினொரு மணிக்கு மேல் முன்பதிவு செய்யலாம் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றுக்கு படிப்படியாக அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடைப்படையில் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார். படிப்படியாக விமானச் சேவை முழு அளவுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும், 25-ம் தேதி விமானச் சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருக்குமாறும் விமான நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவே விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஆனால் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாக எழுந்த புகார் எழுந்தது. உதாரணமாக சென்னை-டெல்லி, சென்னை -கொல்கத்தா வழித்தடங்களில் கட்டணங்கள் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதன் அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு மேல் மீண்டும் தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு கட்டணங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com