யாழ்ப்பாணம் – சென்னை இடையே மீண்டும் தொடங்கியது விமான சேவை!

யாழ்ப்பாணம் – சென்னை இடையே மீண்டும் தொடங்கியது விமான சேவை!
யாழ்ப்பாணம் – சென்னை இடையே மீண்டும் தொடங்கியது விமான சேவை!

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சென்னை- இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.

பலாலி விமானத்தளத்தை இந்தியா சீரமைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019- இல் விமான சேவை ஆரம்பமானது. இலங்கையின் 3- ஆவது சர்வதேச விமான நிலையமாக பலாலி அமைந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த விமானசேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் இன்று 12- ஆம் தேதி முதல் இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘அலையன்ஸ் ஏர்’ சார்பாக வாரத்துக்கு 4 விமான சேவைகள் நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய - இலங்கை மக்களிடையிலான ஆழமான தொடர்புகளுக்கு வழியமைத்து பொருளாதார செழுமையினை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை - யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள் டிசம்பர் 12 முதல் ஆரம்பமாகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com