டெல்லியில் இருந்து தனியாக விமானப் பயணம் : பெங்களூர் வந்த சிறுவன்

டெல்லியில் இருந்து தனியாக விமானப் பயணம் : பெங்களூர் வந்த சிறுவன்
டெல்லியில் இருந்து தனியாக விமானப் பயணம் : பெங்களூர் வந்த சிறுவன்

விடுமுறைக்காக டெல்லி சென்ற 5 வயது சிறுவன் பொதுமுடக்கத்தால் 3 மாதங்கள் தங்கிய நிலையில் இன்று பெங்களூர் திரும்பினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது பெற்றோருடன் வசிக்கும் 5 வயது சிறுவன் விவன் ஷர்மா. இந்தச் சிறுவனின் தாத்தா, பாட்டி டெல்லியில் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சிறிய விடுமுறைக்காக விவன் டெல்லி சென்றிருந்தார். அந்தச் சமயம் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பெங்களூரு திரும்ப முடியாமல், வேறுவழியின்றி தாத்தா, பாட்டியுடன் சிறுவன் தங்கியிருந்தார்.

2 மாதங்களுக்கு மேல் பெற்றோரை பார்க்கமுடியாமல் தவித்துப் போன சிறுவன், உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருந்தார். சிறுவன் தவிப்பதை பார்த்த தாத்தா, பாட்டி எப்படியாவது பெங்களூர் அனுப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியதை அறிந்த தாத்தா, பாட்டி முதல் விமானத்திலேயே சிறுவனை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் வருகை எதிர்பார்த்து பெங்களூர் விமான நிலையத்தில் தாய் காத்திருந்தார். விமான ஊழியர்கள் சிறுவனை பத்திரமாக பெங்களூரு கொண்டு வந்து அவரது தாயிடம் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com