லிஃப்டில் கவனம் தேவை: பெற்றோர் அலட்சியத்தால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

லிஃப்டில் கவனம் தேவை: பெற்றோர் அலட்சியத்தால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
லிஃப்டில் கவனம் தேவை: பெற்றோர் அலட்சியத்தால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் இரு கேட்டுகளுக்கு நடுவே சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராவி சாகு நகரைச் சேர்ந்தவர் சர்ஃபராஸ். தையல்காரராக உள்ளார். இவருக்கு 2 மகள்களும், ஹொஜபா சாயிக்(05) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 4வது தளத்தில் இருந்த தனது வீட்டிலிருந்து தரை தளத்திற்கு செல்ல 3 குழந்தைகளும் அங்கு இருந்த கிரில் லிஃப்டை நேற்று மதியம் 12.45 மணியளவில் பயன்படுத்தியுள்ளனர். அப்போது லிஃப்டிற்குள் முதலில் சென்ற சிறுமி சாயிக் வருவதற்குள் கதவை சாத்தியுள்ளார். சாயிக் லிஃப்டின் இரு கதவுகளுக்கு இடையே நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து லிஃப்டிற்கு வெளியே இருந்த சிறுமியும் கிரில் கதவை சாத்தியுள்ளார்.

இதையடுத்து லிஃப்ட் தரைதளத்திற்கு நகர்ந்தது. அப்போது இடையில் சிக்கிய சிறுவன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிறுவனின் தந்தை சர்ஃபராஸ் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் கவனம் இல்லாமல் சிறுவர்கள் லிஃப்ட்டை இயக்கும் அள்விற்கு அலட்சியமாக இருந்ததால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோகும் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com