தமிழ்நாட்டில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள்

தமிழ்நாட்டில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள்
தமிழ்நாட்டில் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள்

சென்னை அருகே வல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் 5 இடங்களில் பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார். 

இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தப் பரிந்துரையை செய்துள்ளது. மக்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தத் தகவலை தெரிவித்தார். எண்ணூர், ஆசனூர், தருமபுரி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் பெட்ரோலிய மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க முதற்கட்டமாக மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் அனுமதி பெற வேண்டியுள்ளது. மேலும் சில கமிட்டிகளின் அனுமதியும் பெறவேண்டும். இது இறுதியான முடிவு அல்ல; பரிந்துரை மட்டுமே என்று கூறப்படுகிறது. 

நாகை, திருவாரூரில் ஏற்கனவே பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் உள்ள நிலையில் மேலும் 5 பெட்ரோலிய மண்டலங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com