கர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: காப்பாற்ற முடியாததால் காதலன் தற்கொலை

கர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: காப்பாற்ற முடியாததால் காதலன் தற்கொலை
கர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: காப்பாற்ற முடியாததால் காதலன் தற்கொலை

காதலனை சரிமாரியாகத் தாக்கிவிட்டு, கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். காதலியை காப்பாற்ற முடியாத ஏக்கத்தில் காதலர் தற்கொலை செய்துகொண்டார். 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருந்ததை அடுத்து, அந்த பெண் இரண்டு மாத கர்ப்பமானார். ஜூலை மாதம் 13 ஆம் தேதி இரவு, பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்துக்கு இளைஞரின் பைக்கில் சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெண். அப்போது நடுவழியில் சுனில், விகாஸ், ஜீதேந்திரா ஆகியோர் பைக்கை வழி மறித்தனர். வாள் மற்றும் இரும்புக் கம்பியால், காதலனை சரமாரியாகத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை, தூக்கிச் சென்றனர். பின்னர் தங்கள் நண்பர்கள் விஜய், பப்பு ஆகியோரையும் அழைத்தனர். ஐந்து பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர், பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவர் கர்ப்பம் கலைந்தது. இந்நிலையில், காதலியை காப்பாற்ற முடியாத ஏக்கத்தில், அந்த இளைஞர், மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை ஒரு கும்பல் தாக்கியது பற்றியோ, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றியோ அந்தப் பெண் யாரிடமும் மூச்சு விடவில்லை.

இந்நிலையில் இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். அதில், ஜீதேந்திரா சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் இந்த விஷயங்கள் தெரிய வந்தன. பிறகுதான் அந்த பெண், நடந்ததை போலீசிடம் சொன்னார். இதையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு பிறகுதான் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com