மீனவர் விடுவிப்புக்கு நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

மீனவர் விடுவிப்புக்கு நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி
மீனவர் விடுவிப்புக்கு நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி

இலங்கை அரசு சிறைபிடித்த 42 மீனவப் படகுகள் மற்றும் 75 மீனவர்களின் விடுதலையை உறுதிசெய்ய நேரடியாக நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுதலை செய்வதற்காக பிரதமர் நேரடியாக தலையிட்டதற்காகவும் அவரின் தொடர் முயற்சிக்காகவும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தாமும் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததையும் பழனிசாமி தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் கடந்த 27-ம் தேதி தமிழகத்திலிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பாகவே 42 படகுகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக வெளியுறவுத்துறையிடமிருந்து தகவல் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 75 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இலங்கை வசமுள்ள எஞ்சிய 107 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறையை அறிவுறுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com