துணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது

துணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது

துணிக்கடையில் பயங்கர தீ : கட்டிடம் இடிந்து விழுந்தது
Published on

ஆந்திரா மாநிலம் சித்தூரிலுள்ள பிரபல துணிக்கடையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின. 50 ஆண்டுகள் பழமையான அந்த துணிக்கடையும் தீயில் எரிந்து சேதமடைந்தது. 

துணிக்கடையின் முதலாவது மாடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூடியிருந்த கடையை திறப்பதற்கு தாமதம் ‌ஏற்பட்டதால், அதற்குள் தீ கட்டடம் முழுவதும் பரவியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கடையின் துவர் இடிக்கப்பட்டு, பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com