போதைப் பொருள் விவகாரம்: நடிகை ராகினி திவேதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

போதைப் பொருள் விவகாரம்: நடிகை ராகினி திவேதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
போதைப் பொருள் விவகாரம்: நடிகை ராகினி திவேதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

கர்நாடகாவில் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ராகினி திவேதி உள்ளிட்ட 12 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர், மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட 12 பேரை பெங்களூர் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வழக்கில் முதல் குற்றவாளியாக கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக ராகினி திவேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com