“விதி யாரையும் விட்டு வைக்காது” - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த நடிகை ரோஜா!

“விதி யாரையும் விட்டு வைக்காது” - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த நடிகை ரோஜா!
“விதி யாரையும் விட்டு வைக்காது” - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்த நடிகை ரோஜா!

ஆந்திர சட்டசபையில் தனது குடும்பத்தினரை விமர்சித்ததாக சொல்லி வெளிநடப்பு செய்தார் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. பத்திரிகையாளர் சந்திப்பில் கண்கலங்கினார் அவர்.  

“இனி நான் சட்டசபைக்கு திரும்பினால் அது முதல்வராக வெற்றி பெற்ற பிறகு தான் இருக்கும்” என சூளுரைத்துள்ளார். 

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா. 

“சந்திரபாபு... விதி யாரையும் விட்டு வைக்காது. அனைவரது கணக்கையும் சரியாக கணக்கு பார்த்து தீர்த்துவிடும். அன்று 72 வயதில் என்.டி.ஆரை நீங்கள் கலங்க செய்தீர்கள். இன்று 71 வயதிலேயே அதை நீங்களும் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதனால் தான் சொல்வார்கள் ‘நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்பும் என்று’. 

தங்கள் மனைவி குறித்து பேசிவிட்டார்கள் என கலங்கும் நீங்கள் தான் அதிகாரத்தில் இருந்த போது ‘ரோஜா, ப்ளூ பிலிமில் நடிக்கிறார்’ என சொன்னீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா?

அதிகாரத்தில் இருந்த போது அனைவரையும் நீங்கள் விமர்சித்துள்ளீர்கள். விஜயா அம்மா, ஷர்மிளா அம்மா (ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மற்றும் சகோதரி) குறித்து நீங்கள் பேசியதை யாரும் மறந்து விடவில்லை. 

இந்த நிலையில் உங்களது போலியான நீலிக் கண்ணீருக்கு யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்கு தெரிந்து இனி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு காரணம் உங்கள் சபதம் தான். Bye.. Bye… பாபு” என சொல்லியுள்ளார் ரோஜா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com