பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!

பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!

பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
Published on

மத்திய அரசு அமல்படுத்திய புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகிறது. சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் மூலம் விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து அதை நடத்தி வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர்

 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை செங்கோட்டையை விட்டு செல்லப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையில் முகப்பு பகுதியில் உள்ள சிறிய கொடிக்கம்பத்தில் விவசாய சங்கங்களின் கொடியும் ஏற்றப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com