உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் பூரில் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் விவசாய அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர். குறிப்பாக, இம்மாதம் 27ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.