மகராஷ்ட்ராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

மகராஷ்ட்ராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

மகராஷ்ட்ராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
Published on

மகராஷ்ட்ரா மாநில அரசு ரூ.34,000 கோடி அளவுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ.1.5 லட்சத்துக்குக் குறைவான விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிச்சுமையைக் குறைக்க மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தினை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, விவசாயக் கடன்களை முறையாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் தொகையில் 25 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என்றும் பட்னாவிஸ் அறிவித்தார். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகராஷ்ட்ரா மாநில விவசாயிகள் 11 நாட்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com