அதில் ஒருவர் வாகனங்களை பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறார்.
இந்த கடையில் கடந்த இரு மாதங்களில் மூன்று கோடியே 85 லட்சத்து 14 ஆயிரத்து 098 'யூனிட்' மின்சாரம் பயன்படுத்தியதாக கூறி 3.71 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தும்படி மின்சார அலுவலகத்தில் இருந்து ‘பில்’ அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெமரம் படேல் அந்த ரசீதுடன் மாநில அரசின் மின் நிர்வாக மையத்திற்கு சென்றார்.