திருப்பதி சாமி தரிசனத்தில் போலி டிக்கெட்: அதிகாரிகள் அதிர்ச்சி

திருப்பதி சாமி தரிசனத்தில் போலி டிக்கெட்: அதிகாரிகள் அதிர்ச்சி

திருப்பதி சாமி தரிசனத்தில் போலி டிக்கெட்: அதிகாரிகள் அதிர்ச்சி
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம் சேவையில் போலி டிக்கெட்டுடன் தரிசனத்திற்கு செல்ல முயன்ற பக்தர்கள் மீது விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவையுடன் சுவாமியை துயில் எழுப்புவது வழக்கம். ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் சேவைகளில் முதல் சேவையான சுப்ரபாத சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தரிசனத்திற்காக இன்று காலை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருந்த ஊழியர்கள் சோதனை செய்தனர்.

இச்சோதனையில் மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 4 பக்தர்கள் கொண்டுவந்த டிக்கெட்டுகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் இந்த டிக்கெட்டுகளை வாங்கியதாகவும் ஒரு டிக்கெட் ரூ4 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து தேவஸ்தானம் விஜிலென்ஸ் அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை டிக்கெட் பொது கோட்டாவில் ரூ 120க்கும் விற்கப்பட்டு வரும் நிலையில் சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கப்படும் கோட்டாவில் ரூ 220 விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ 4 ஆயிரத்திற்கு இந்த டிக்கெட்டுகளை போலியாக தயார் செய்து விற்பனை செய்த மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பிரபாகரனை கைது செய்வதற்காக போலீசார் மூலம் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைபோன்று பிரபாகர் எத்தனை பேருக்கு போலி டிக்கெட் வழங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com