விவசாயிகளுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆதரவு

விவசாயிகளுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆதரவு
விவசாயிகளுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆதரவு

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்களது பதக்கங்களை திருப்பி அளித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர்கள், தங்களுக்கு அனுப்பப்பட்ட விருதுகளையும் பதக்கங்களையும் திருப்பி அளித்துவருகின்றனர்.

சிங்கு எல்லை பகுதியில் முகாமிட்டுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நவம்பர் 26 ஆம் தேதி முதல் பதக்கங்களை சேகரித்துவருகின்றனர். இதுவரை 5 ஆயிரம் பதக்கங்களை சேகரித்த நிலையில், அடுத்த 2 நாட்களில் 25 ஆயிரம் பதக்கங்களை சேகரிக்கவும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com