பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.20-க்கு ஒத்திவைப்பு

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.20-க்கு ஒத்திவைப்பு

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.20-க்கு ஒத்திவைப்பு

பிப்ரவரி 16 நடக்கவிருந்த பஞ்சாப் மாநில தேர்தல், பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

குரு ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தில் பெருவாரியான மக்கள் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி புனித பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், அம்மாநிலத்தில் தேர்தலை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பஞ்சாப் மாநில முதல்வர் சரண்சித் சிங் சன்னி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அதன்படி அம்மாநில தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சாப்பில் பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும், தற்போதுதான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைத்திருப்பதால் இப்போதுதான் அதுகுறித்து ஆலோசித்து இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com