அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியில் எவ்வளவு பாதுகாப்பானவை என்பது அனைத்துக் கட்சியினருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்படும் எனக் கூறினார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை யாராவது நிரூபித்துக் காட்ட முடியுமா என்ற வெளிப்படையான சவாலை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறையை அனைத்துத் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முனைப்பு கொண்டுள்ளதாகவும் நசிம் ஜைதி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com