56 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

56 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
56 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறாது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் 56 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளில் தற்போதைய சூழலில் இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேநேரத்தில் பிற மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிக்கும், மணிப்பூரில் காலியாக உள்ள இரு பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com