இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப் பரிந்துரை

இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப் பரிந்துரை

இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப் பரிந்துரை


தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கக் கோரி தேசியத் துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஷூல் பகுதியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்.இதன் மூலம் இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெயரைப் பெற்றார். இதனையடுத்து பிரேசிலின் ரீயோடி ஜெனேரீயோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் தங்கப் பதக்கத்தை வென்றார்.


இதன் மூலம் முதல் முறையாக சீனியர் பிரிவில் சாதனை படைத்த வீராங்கனை என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். இந்நிலையில் இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கக் கோரி தேசியத் துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. இவர் கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com