சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு குற்றவாளிகள் செய்த மோசமான செயல்!!

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு குற்றவாளிகள் செய்த மோசமான செயல்!!
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு குற்றவாளிகள் செய்த மோசமான செயல்!!

ராஜஸ்தானில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, மிரட்டி அந்த பெண்ணிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார் பாஸ் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் முக்கிய குற்றவாளியான சாகில் என்பவர், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 16 வயது சிறுமியை தொடர்புகொண்டு, அவருடைய சில அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருக்கிறது எனவும், உடனே தான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும் எனவும், அப்படி வராவிட்டால் அவற்றை பொதுவெளியில் பதிவிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனைக்கேட்டு பயந்துபோன சிறுமி சாகில் கூறிய இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து 8 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் ஆடைகளை உரிந்து அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், அதை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டியே, பலமுறை சிறுமியை தங்களது பாலியல் இச்சைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைபட்ட காலத்தில் மட்டும் சிறுமியை மிரட்டி, ரூ.50,000 பணமும் பெற்றுள்ளனர். அதன்பிறகு கேட்ட பணத்தை சிறுமியால் கொடுக்கமுடியாமல் போகவே, சிறுமியின் வீடியோ உள்ளூர் சமூக வலைதள க்ரூப்களில் பகிர்ந்துள்ளனர்.

இது சிறுமியின் அண்ணனுக்கு தெரியவரவே, புதன்கிழமை காவல்நிலையத்தில் புகாரளித்து, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக அவர்களை தேடிவருகின்றனர். மேலும், இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com