சித்தராமையா
சித்தராமையா@siddaramaiah | Twitter

முடா நில முறைகேடு விவகாரம் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

நில முறைகேடு விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Published on

முடா நில முறைகேடு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், லோக் ஆயுக்தா காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது. அதனை தொடர்ந்து விசாரணை நடத்த 4 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்க உள்ள நிலையில், முடா நில முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ed
edtwitter

முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நிலம் விற்ற தேவராஜ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இச்சூழலில், முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளன.

சித்தராமையா
“அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்!” - மத்திய அரசு அறிக்கை
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com