கடந்த சில தினங்களாக கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால், காவிரி ஆற்றில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம், 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மழை குறைந்ததால், நேற்று 26 ஆயிரம் கன அடியாகக் குறைந்த நீர்வரத்து, இன்று 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. ஆனாலும் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.