\
மதுவுக்கு அடிமையானவன் மனைவி, குழந்தைகளை விற்க முயன்ற அவலம்

மதுவுக்கு அடிமையானவன் மனைவி, குழந்தைகளை விற்க முயன்ற அவலம்

மதுவுக்கு அடிமையானவன் மனைவி, குழந்தைகளை விற்க முயன்ற அவலம்
Published on

ஆந்திராவில் மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்க முயற்சித்தவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொவளகுண்டா பகுதியை சேர்ந்த மத்திலெட்டி - வெங்கடம்மா தம்பதிக்கு ‌நான்கு பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். மத்திலெட்டி மது‌விற்கு அடிமையாகி அதிக அளவில் கடன் வாங்கியதால், கடந்த ஆண்டு தனக்கு பிறந்த குழந்தையை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளதால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த வெங்கடம்மா, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் வழக்கு‌ப்பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com