இந்தியா
“ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை கொடுத்தால் சாப்பாடு இலவசம்” தெற்கு டெல்லி மாநகராட்சி அறிவிப்பு
“ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை கொடுத்தால் சாப்பாடு இலவசம்” தெற்கு டெல்லி மாநகராட்சி அறிவிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை குறைக்கும் நோக்கில் தெற்கு டெல்லி மாநகராட்சி சார்பில் ஒரு புதுவிதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்துவிட்டு மாநகராட்சியின் ‘GARBAGE CAFE’வில் உணவை இலவசமாக சாப்பிடும் வழிவகையை செய்துள்ளது மாநகராட்சி.
இந்த மாநகராட்சியின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இதற்காகவுக்கே 20க்கும் மேற்பட்ட உணவகங்களை மாநகராட்சி இயக்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதுமாதிரியான உணவன்கள் இந்தியாவின் சில மாநிலங்களில் இயங்கியதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.