கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம்: டாக்டர் கபீல் கான் கைது

கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம்: டாக்டர் கபீல் கான் கைது

கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம்: டாக்டர் கபீல் கான் கைது
Published on

கோரக்பூரில் 30 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயின. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீல் கான் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து கபீர்கான் தலைமறைவாகி விட்டார் என்றும் அவரைத் தேடி வந்ததாகவும் தெரிவித்த போலீசார் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com