வயிற்று வலி என மருத்துவமனை சென்ற பெண்ணிற்கு அதிர்ச்சி..! 3 மணி நேரம் அறுவை சிகிச்சை..!

வயிற்று வலி என மருத்துவமனை சென்ற பெண்ணிற்கு அதிர்ச்சி..! 3 மணி நேரம் அறுவை சிகிச்சை..!
வயிற்று வலி என மருத்துவமனை சென்ற பெண்ணிற்கு அதிர்ச்சி..! 3 மணி நேரம் அறுவை சிகிச்சை..!

மேகாலயாவின் கிழக்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஜம்ஜே கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணுக்கு ஜூலை 29ஆம் தேதி கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் மேகாலயாவின் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி டாக்டர் வின்ஸ் மோமி தலைமையில் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழு தலைமையில் அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு, 24 கிலோ எடையுள்ள கட்டி வெளியே எடுக்கப்பட்டது.

இப்போது அந்த பெண் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் கட்டியாக இருக்கும் என சந்தேகித்த மருத்துவர்கள் பயாப்ஸி சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய அந்த பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் ரத்த தானம் செய்ததற்கு மாவட்ட துணை ஆணையர் ராம் சிங் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை பாராட்டி மேகாலயா முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com