ராஜஸ்தானில் காரில் சென்ற மருத்துவ தம்பதி சாலையிலே துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ராஜஸ்தானில் காரில் சென்ற மருத்துவ தம்பதி சாலையிலே துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ராஜஸ்தானில் காரில் சென்ற மருத்துவ தம்பதி சாலையிலே துப்பாக்கியால் சுட்டுக் கொலை
Published on

ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரிலுள்ள சாலையில் காரில் சென்று கொண்டிருந்த மருத்துவ தம்பதி சுதீப் குப்தா, சீமா குப்தா ஆகியோரை, பைக்கில் வந்த இருவர் வழிமறித்து சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த கொலைச் சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அர்ஜூன் குமார், மகேஷ் குமார் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனர்.

மருத்துவர் சுதீப் குப்தாவுடன் தொடர்பில் இருந்த இளம்பெண்ணும், ஆறு மாத குழந்தையும், 2019ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்டதாகவும், இதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீசார் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com